ஐந்து அபாய வழிகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, April 18, 2011

ஐந்து அபாய வழிகள்

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. பலவீனமான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட்வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மேலும் மேலும் பல புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாகவும், சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்நேரமும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம் தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.

இந்த ஆண்டில், இவ்வாறான தீய விளைவுகளுக்கு வழி தரக்கூடிய ஐந்து முக்கிய பிரிவுகளை, வைரஸ் எதிர்ப்பு ஆய்வு நிறுவனங்கள் பட்டிய லிட்டுள்ளன. குறிப்பாக, சோபோஸ் ( Sophos ) பாதுகாப்பு நிறுவன தொழில் நுட்ப ஆய்வாளர் கிரஹாம் க்ளூலி முக்கிய சில பிரிவுகள் குறித்து எச்சரிக்கை தந்துள்ளார். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். இவர் தலைமை மேற்கொண்டிருக்கும் குழு, பழைய புதிய மால்வேர் தொகுப்புகளாக, தினந்தோறும் 95,000 வகைகளை ஆய்வு செய்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

1. முதல் அபாயம் - மொபைல் சாதனங்கள்: இங்கு மொபைல் சாதனங்கள் என்றுகுறிப்பிடப்படுவது மொபைல் போன்கள் மட்டுமல்ல. அவற்றையும் சேர்த்து நாம் செல்லும் வழியெல்லாம் செயல்பட எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்களாகும். முதலாவதாக, மொபைல் போன்களில் ஸ்மார்ட் போன்கள் இவ்வகை அபாயத்திற்கு ஆளாகின்றன. உலக அளவில் 85% இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நாடுகளில் இவர்களில் பலர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் விலையும் குறைந்து வருவதால், இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போன்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அப்ளிகேஷன்கள் வழியாகப் பல வைரஸ்களும் மால்வேர் தொகுப்புகளும் பரவத் தொடங்கிவிட்டன. அண்மையில் மார்ச் 1 அன்று கண்டறிந்தபடி, கூகுள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தர்ட் பார்ட்டி தொகுப்புகளில் ட்ராய்ட் ட்ரீம் ( DroidDream ) என்னும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உள்ள தொகுப்பினை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெறுகிறது. இதன் மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை, போனுக்கு இந்த வைரஸ் டவுண்லோட் செய்து கொள்கிறது.

இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் உள்ள அனைத்து தொகுப்பு களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தை யும் நீக்கியது.
அதே போல மற்ற போன்களில் பரவி இருந்த இதே வைரஸையும் தானாகவே நீக்கியது.

சீனாவில், இவ்வகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறியப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எனவே மொபைல் போனுக்கான அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்கையில், இணைய தளம் சென்று, அந்த அப்ளிகேஷன்கள் பாதுகாப் பானவை தானா என்று உறுதி செய்து கொண்டு செயல்பட அனைத்து வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

2. சமுதாய இணைய தள வழி: பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்கள் , மக்களிடையே நல்லுறவினை வளர்க்கும் அதே வேளையில், வைரஸ்கள் வளர்ந்து பரவு வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறி வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கள் தயாரிக்கும் பிட் டிபண்டர், இது குறித்துக் கூறுகையில், பேஸ்புக் தளத்தில் உள்ள 20% பேர், மிக எளிதாக மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர் என்று அறிவித்துள்ளது. இந்த தளங்களில் ஸ்கேம்கள் வழியாக பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றினைத் தூண்டுதல்களாகக் கொண்டு இவை இந்த தள உறுப்பினர் களைச் சிக்க வைக்கின்றன. போலியான சில அப்ளிகேஷன்கள் வழியாகவும் இவை பரவுகின்றன. சிக்கிடும் நபர்களின் மொபைல் போன் எண், பிறந்த நாள், ஊர், பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்த தகவல்களைத் திருடி, அவர்களைப் போல போலியான ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்ற முயல்கின்றனர்.

எனவே உங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோவினைப் பார்க்க அழைக்கும் ஸ்கேம் தகவல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அல்லது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

3. போலி ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்: அண்மைக் காலத்தில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பெயரில், போலியான சில அறிவிப்புகள் வெளியாகின்றன. இவற்றை நம்பி செயலில் இறங்குபவர் களின் கம்ப்யூட்டர் தகவல்கள் முழுமையாகத் திருடப்படுகின்றன. சோபோஸ் நிறுவனம் இது வரை 8,50,000க்கும் மேற்பட்ட போலி ஆண்ட்டி வைரஸ் அறிவிப்புகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்திகளை வழங்கியுள்ளது. இவற்றை “scareware” என இந்நிறுவனம் அழைக்கிறது. முதலில் பிரபலமான ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் பெயரில், இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தருவதாக, மக்களை இது ஏமாற்றுகிறது. சிக்குபவர்களுக்கு, ஏதேனும் ஒரு புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஆய்வு செய்வதாகக் கூறுகிறது. பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் மோசமான வைரஸ் வசம் சிக்கியுள்ள தாகவும், அதனை நீக்க ஒருமுறை கட்டணம் செலுத்தித் தங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டிச் சிக்க வைக்கிறது. இதற்கு இணங்குபவர்களிடம் உங்களின் கிரெடிட் கார்ட் மூலம் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லிக் கேட்டுப் பின்னர், அந்த கிரெடிட் கார்டில் உள்ள பணம் அனைத்தையும் சுரண்டி விடுகிறது.

இது போல அறிவிப்பு வருகையில், சம்பந்தப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தரும் நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு நீங்களாகச் சென்று, அவ்வாறு ஏதேனும் புதிய புரோகிராம் உள்ளதா என்று அறிந்து கொள்வதே நல்லது.

4. பி.டி.எப். டாகுமெண்ட் வழி:
இந்த வழி மிக மிகப் பழைய வழி என்றாலும், இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இமெயில் வழியாக ஸ்பேம் மெயில்களை, இணைக்கப் பட்ட பைல்களுடன் அனுப்பி, அவற்றை டவுண்லோட் செய்து திறந்தவுடன் கம்ப்யூட்டரில் பரவி தகவல்களைத் திருடுவது இந்த பழக்கத்தின் வழியாகும்.

இப்போது இவ்வாறு இணைக்கப் படுவது பெரும்பாலும் பி.டி.எப். பைல்களாகத் தான் உள்ளன. ஏனென்றால், வைரஸ்களை பி.டி.எப். பைல்களில் இணைப்பது மிகவும் எளிதான ஒரு வழியாகும். 2010 ஆம் ஆண்டில், இவ்வாறு மோசமான நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட மெயில்களில் 65% மெயில்களில் பி.டி.எப். பைல்களே வைரஸ்களுடன் அனுப்பப்பட்டன என்று கண்டறிந்துள்ளனர். இது முந்தைய 2009 ஆம் ஆண்டில், 52.6% ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 76% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதனைத் தடுக்க, நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை எப்போதும் இயக்க நிலையிலும், அப்டேட்டட் நிலையிலும் வைத்திருக்கவும். இமெயில்களுடன் வரும் இணைப்பு களை, நீங்கள் எதிர்பார்த்த இணைப்பாக இல்லாமல் இருந்தால் திறக்க வேண்டாம். அப்படியே திறக்க வேண்டும் என எண்ணினால், ஆன்லைனில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்து முடிவுகளைக் கூறும் தளங்களுக்கு அவற்றை அனுப்பி, முடிவு பெற்ற பின்னரே திறக்கவும்.

5. இணைய வழி நிறுவன யுத்தம் :
வர்த்தக ரீதியாகப் போட்டியிடும் நிறுவனங்கள், இப்போது ஒருவரை ஒருவர் காலை வாரும் வேலைக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். போட்டி நிறுவனத்தின் சர்வருக்கு மால்வேர்களை அனுப்பி, அந்நிறுவனத்தின் ரகசிய தகவல்களைத் திருடும் வேலை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடைபெறு கின்றன. விக்கிலீக்ஸ் தளத்தை முற்றுகையிட்ட முயற்சி மற்றும் எகிப்து, லிபியா மற்றும் துனிஷியா நாட்டில் தொடங்கிய போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இது போன்ற இணையக் கெடுதல் வேலைகள் இருந்ததாகத் தெரிகின்றன. இன்னும் இந்தியாவில் இந்த வேலை தொடங்கப் படவில்லை. ஆனால் அந்த நாளும் சீக்கிரம் வரலாம் என்றே நிறுவனங்கள் கருதுகின்றனர். இந்த முயற்சிகள் தனிப்பட்ட நபரைப் பாதிப்பதில்லை.




-------------------
 
நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
 

No comments:

Post a Comment